நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நேபாளத்தை உலுக்கிய ஜென் ஜி போராட்டங்களின் போது நடந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான அடக்குமுறை நடவடிக்கைகளுக்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாள காவல்துறையினர் பக்தபூரில் உள்ள குண்டு பகுதியில் அமைந்திருக்கும் கே. பி. சர்மா ஒளியின் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஒளியுடன் சேர்த்து, அவரது ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லெக்ஹாக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கத் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
