இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான ஸ்ரீ பஞ்ச அக்னி அஹடா ஆஸ்ரமக் குழுவினரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும், சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களை விசேடமாக அழைத்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மஸ்கெலியா நிருபர்

