இலங்கை ஆசிரியர் சங்கத்தின்மத்திய குழு சிரேஸ்டஉறுப்பினரும், கிழக்கு மாகாண இணைப்பாளரும் , மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான நாடறிந்த தீவிர தொழிற்சங்க வாதியுமான பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள இன்றைய தினம் உடல் நலக்குறைவால் காலமானார்.
கிழக்கிலங்கையில் தொழிற்சங்கமொன்று இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று முன்னுதாரணமாய் திகழ்ந்து தலைமை தாங்கி வழிகாட்டிய மாபெரும் தலைவன்.
அடிபணியா நெஞ்சுறுதியோடு நின்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின்” மூலம் ஆசிரியர் உரிமைகளை!வென்றெடுக்க அயராது உழைத்தஅதிதீவிர செயற்பாட்டாளர்
இவரது பூதவுடல் நாளை வெள்ளிக்கிழமை பி.ப.3.00 மணியளவில் ஏறாவூரில் இருந்து எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு கள்ளியன் காடு பொதுமயானத்தில் தகனக்கிரியை இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
சா. நடனசபேசன்
