களுவாஞ்சிக்குடியில் வருடாந்த கண்காட்சியும் விற்பனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் நேற்று (21) பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண பிராந்திய நிர்வாகம், கிராம அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சுற்றுலா, சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளர் இசட். ஏ. ம் பைசல், விசேட அதிதியாகக் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கே.இளங்குமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அததுடன், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. கோகுலராஜன், மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக சிரேஷ்ட தையல் போதனாசிரியை நி. ரவிச்சந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ . நவநாயகம் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பயிற்சி நிலைய மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட கைவினை பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
களுவாஞ்சிக்குடியில் வருடாந்த கண்காட்சியும் விற்பனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றபோது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவானது தையல் போதனாசிரியர், பயிற்சி நிலைய மாணவிகள் இணைந்து ஒழுங்கமைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






மட்டக்களப்பு சா. நடனசபேசன்

