இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டி அறிய உரிய நடவடிக்கை - பிரபு எம்பி

எதிர்வரும் காலங்களில் இயற்கை அனைத்துத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்பைத் தற்போது அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

வானிலை பாதிப்பு பற்றிய தகவல்களைப் பெறக்கூடிய தொழில் நுட்ப கட்டமைப்புகளை கடந்த கால அரசாங்கம் ஒழுங்காக பராமரிக்காததனால் எமக்குப் பாரிய அனர்த்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரபு தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேலும் உரையாற்றுகையில்,

“எதிர்வரும் காலங்களில் இயற்கை அனைத்துத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்பை நாம் தற்போது ஏற்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய திட்டங்களை வகுத்து வருகின்றோம்

நமது அரசாங்கம் மக்களின் நலனுக்காக என்றும் முன்னிற்கும். இயற்கை அனர்த்தங்கள் பற்றி எதிர்க்கட்சிகள் குறை கூறியிருந்தாலும் கூட இடம் பெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை செய்ய நாம் தற்போது பாராளுமன்றத்தில் ஒரு குழு ஒன்றை அமைத்து செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

மட்டக்களப்பு வரதன்