செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஜூலையில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆவது நாள் பணிகள் இன்று (23) நடைபெற்றன.

இன்றைய தினம் மட்டும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய அகழ்வு பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஜூலை 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.