வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழுப் போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ. விதுர்ஷினி இவ் வருடத்திற்கான வடமாகாண சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று குழுப் போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்குத் தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் பங்காற்றியுள்ளார்.
கடந்த 18.04.2026 நடைபெற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட அணியில் இடம் பிடித்திருந்த ஜெ. விதுர்ஷினி, நேற்று (13) யாழ் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டியில் வடமாகாணம் சார்பாக கலந்துகொள்கிறார்.
இவ்வெற்றியானது யா/ வேலணை மத்திய கல்லூரிக்கும் வேலணை பிரதேசத்திற்கும் தீவக மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
இதேவேளை கரம் போட்டியில் தீவ கமண்ணைச் சார்ந்த வீரரொருவர் வடமாகாண அணியில் பங்கேற்று; தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
பாடசாலையின் முதல்வர் இ. ஹஸ்ரன் றோய்,உடற்கல்வி ஆசிரியர் அ. றொ.அனோஜன் ஆகியோர் மாணவியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
