மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புனித இப்தார் நிகழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) மாலை இடம் பெற்றது.

கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இங்குக் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்:

இப் புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவத்தினையும் மேலும் வலுசேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம். ரி. எம். ரிஸ்வி ஆறறிய புனித ரமழான் விசேட உரையில் நோன்பின் மகத்துவம் தொடர்பான கருத்துக்களைத் தெளிவூட்டினார்.

இந்நிகழ்வில் மெளலவி ருசைதுர் ரகுமான், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர், தேசிய உரச் செயலக பிரதி பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின், அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத், மாவட்ட தகவல் தொடர்பாடல் பிரிவின் உதவி பணிப்பாளர் சின்தா முபாஸ், ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசீர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அங்கர் முகவர் ருசைனி பாயிஸ், வர்த்தக பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு வரதராஜன்