டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது முழுச் சம்பளத்தினையும் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியர் வடிவேல் குலேந்திரன் வழங்கி வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சம்மாந்துறை கல்வி வலயம் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணியினை ஆரம்பித்து இருந்தது
இதன்போது பாடசாலைகள் நிவாரணப்பொருட்களைச் சேகரித்து வழங்கிவைத்ததுடன் இவ் ஆசிரியர் தனது டிசம்பர் மாதச் சம்பளம் முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதற்கான இணைப்பாளர் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எச். நைறோஸ்கான் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்…………………
சா.நடனசபேசன் மட்டக்களப்பு
