உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல் நூல் வெளியீட்டு விழா

இசை முரசு நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு நினைவாக “உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 3.45 நடைபெறவுள்ளது.

கொழும்பு-10 அல்ஹிதாயா கல்லூரி பஹார்தீன் மண்டபத்தில் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும். வெள்ளாப்புவெளி நண்பர்குழு இதனை ஏற்பாடு செய்துள்ளது.

 பாவலர் நல்லதம்பி சாகிபின் புதல்வர் கே.ஏ.எஸ்.ஹைதர் அலி முதன்மை அதிதியாக கலந்துகொள்வார்.நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்புரையாற்றுவார்.

கௌரவ அதிதிகளாக பேராசிரியர் எம்.எஸ்.மூக்கையா, கலாநிதி பி.ஏ.ஹூஸைன்மியா,அல்ஹாஜ் எம்.சி.பஹார்தீன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

மணலி அப்துல்காதர் நூல் தொகுப்புரையையும் மேமன் கவி தொடரக்கவுரையையும்

முல்லை முஸ்ரிபா வெளியீட்டுரையையும் எம்.சி.நஜூமுதீன் நன்றி உரையும் நிகழ்ந்ததாவுள்ளனர்.