மன்னாரில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மக்களின் வாழ்வைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத் திட்டம், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக, பாரிய போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக மன்னாரில் இன்று காலை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

-மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2 ஆம் கட்ட காற்றாலைக் கோபுரம் அமைக்கும் திட்டம், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மன்னார் பசார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

கட்சி பேதங்களின்றி, மக்கள் நலனுக்காக அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் மன்னாரில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.