சந்திரன் கிராமத்தில் இந்திய வீடுகள்

சந்திரன் கிராமத்தில் இந்திய வீடுகள்

சந்திரன் கிராமத்தில் இந்திய வீடுகள்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு சந்திரன் கிராமத்தில் இந்திய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான வைபவம் புதன்கிழமை (28) விமரிசையாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு நிகழ்ச்சி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்புவில் நடைபெற்றது.

முல்லைத்தீவில் இந்திய வீடுகள்

சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்நிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம், வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு, வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சந்திரன் கிராமம் திறப்பு விழாவின்போது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025