கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் 100 மில்லியன் ரூபாய் நன்கொடை

அதானி துறைமுகங்கள், ஜோன் கீல்ஸ் குழுமம், இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றின் கூட்டுச் செயற்பாட்டில் இயங்கும் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் றீ பில்டிங்க ஶ்ரீலங்கா நிதியத்திற்கு 100 மில்லியன் இலங்கை ரூபாயை நன்கொடையாக வழங்கியது.

இதற்கான காசோலை கையளிக்கும் வைபவம் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியாஞ்சல் பாண்டே ஆகியோரின் முன்னிலையில் கையளிக்கப்பட்டது.

தகவல் இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு