லசந்த கொலை விசாரணை தீவிரம்

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்பேரில் நான்கு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விசாரணைக் குழுக்களை கண்காணிக்கும் பணிக்காக தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், மாத்தறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.