மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகள் இன்று (12) பக்திப்பூர்வமாக நடைபெற்றன.
கிழக்கு மாகாணத்தில் பிதிர்க்கடன் செலுத்தும் சிறப்பு பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாடுகள் இன்று (12)பக்திப் பூர்வமாக இடம் பெற்றன.
புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள் இன்றைய தினத்தில் பிதிர்க் கடன் செலுத்தினால் அஃது ஆண்டு முழுவதும் செலுத்துவதற்குரிய பலனை தரும் நாளாக ஆடி அமாவாசை தினம் காணப்படுகின்றமை ஐதீகமாகும்.



தந்தையை இழந்தவர்கள் இன்று விரதம் இருந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகலில் ஈடுபட்டு தீர்த்தக்கரை கரையில் இருக்கும் ஆலய குருக்களிடம் எள்ளும் தண்ணீரும் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு அர்ச்சனை செய்வர்.
அரிசி, மரக்கறி தானம் வழங்கி நண்பகல் தீர்த்த மாடி ஆலயங்களில் வழங்கும் அன்னதானங்களை உண்டு தமது விரதங்களை முடிவுறுத்துவார்கள்
இந்த வழிபாடுகளில் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
எஸ். வரதராஜன், மட்டக்களப்பு
