காலி சிறைச்சாலையில் கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு!

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைக்குள் இருந்த இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த கைதி கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.