இராணுப் பாதுகாப்புடன் ஒற்றை, இரட்டை நாள்களில் எரிபொருள்

இராணுவ பாதுகாப்புடன் சகல எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில் ஒற்றை, இரட்டை நாள்களுக்குரிய எரிபொருள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு

அரசாங்கத்தினால் இன்று முதல் சகல எரிபொருள் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு விரைவான சேவையினை வழங்கும் பொருட்டு இன்றைய திகதிக்கு உரியவாறு வாகனத்தின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாகக் காணப்பட்ட வாகனங்களுக்கு QR முறையில் எரிபொருள் வழங்கும் செயல் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது

இதேவேளை மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் போலீஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் வாகனங்களுக்கு வேண்டிய எரிபொருளை விரைவாக பெற்றுச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது

இதேசமயம், QR முறையில் முதல் தடவையாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மு. வரதராசன், மட்டக்களப்பு