வத்தளைப்பகுதி சுற்றிவளைப்பில் 300பேர் கைது

வத்தளை பகுதி சுற்றிவளைப்பில் 300பேர் கைது

வத்தளைப்பகுதி சுற்றிவளைப்பில் 300பேர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானை, ஜா-எல, வத்தளை, இறாகமை பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, இராணுவம், கடற்படை ஆகியவை இணைந்து இந்தச் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்கும் செயல்முறையின் ஒரு படியாக இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் சந்திரசேன விளக்கமறியலில்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025