அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம்

அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம்

அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு – அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி நேரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், போமிரிய மத்திய மகா வித்தியாலயம் அதன் 106ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யானைகள் உள்ளிட்ட சுமார் 25 நடனக் குழுக்களின் பங்கேற்புடன் இந்த வீதி அணிவகுப்பு மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி, நவகமுவ சுகதபிம்பாராம புராதன ராஜமகா விகாரையில் இருந்து பாடசாலை வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, பயணிகள் அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம் எனவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் கட்டணக் குறைப்பு இன்று முதல்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025