இன்றும் கனத்த மழை பெய்யும்

இன்றும் கனத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் ஆகிய மாகாணங்களில் இன்று (14) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், மேவ், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
வடமாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவை மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது..
