பலப்பிட்டியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

மீனவர்களை மீட்பதற்காக அனுப்பப்பட்ட பெல்
கடற்படையினரின் பெல் ரக கெலிகொப்டரைப் பயன்படுத்தி பலப்பிட்டியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் தத்தளித்த மீன்பிடி கப்பலில் இருந்து மூன்று மீனவர்கள் பாதுகாப்பாக இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சிலாபம் முதல் புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை தீவிரமாக இருப்பதால், இந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல்கள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அந்தக் கடல் பகுதிகளுக்கு அருகில் படகில் செல்ல வேண்டாம் என்று மீனவ சமூகத்தினருக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.
