அடுத்த சில நாள்களுக்கு மழை

அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்கள் ஆகியவற்றில் அடுத்த சில நாள்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும்.
இன்று (17) மேல், சப்ரகமுவ, வடமேல், வடமாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, வடமாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமேல், வடமத்திய, தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றும் மின்னல் தாக்கமும் ஏற்படும்.
இதன் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
