கிழக்கு முன்னாள் முதல்வர் பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிப்பு

பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய (24) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிள்ளையான் தொலைக் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிக்கப்படுவதாகவும் அவரை ஜூலை 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

Follow us on Facebook