ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார கூட்டுக்குழுவின் 27 ஆவது அமர்வு நாளை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
