மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் பணி நீக்கம் நீக்கப்பட்டதால் மீண்டும் வேலை வழங்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் எட்டுப்பேரில் மூவர் இன்று (11) மயங்கி வீழ்ந்தனர்.
ஒருவர் இன்று காலை 10 மணிக்கு மயங்கினார். அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் இருவர் 10.45 அளவில் மயங்கினர். அவர்கள் அம்பியுலன்ஸ் மூலம் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள தமக்குச் சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்குமாறு கோரி சத்தியாக்கிரகம் ஆரம்பித்த இந்த எட்டுப்பேரும் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
