தமிழ் ◌பாடப் புத்தகங்களில் அதிகம் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாகப் பிரதமரிடம் இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்துரைத்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழ் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் தமிழர் வரலாறு நீக்கப்பட்டிருப்பது பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளைத் தவிர்க்கவும் பாடப் புத்தகங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழரசுக் கட்சி பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் உறுதியளித்தார் என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
