அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா அவசர மனிதாபிமான உதவிகளை அனுப்பி ழவத்துள்ளது.
மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படையின் விக்ரான்ட், உதயகிரி ஆகிய கப்பல்கள் கொழும்பு வந்துள்ளன.
அவற்றில’ 6.2 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்களும் உடனடியாக உண்ணக்கூடிய உணவுப் பொருள்களும் வந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


