கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கூலிக்கொலையாளி

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் இடமொன்றை பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றிவளைத்துள்ளது. 

இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் பல குறியீட்டு ஸ்டிக்கர்கள் அடங்கிய தொகுதியைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீடுகளை உருவாக்கும் இடம் கல்கிசையில் இருப்பதாக பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. 

அதன்படி, அதன் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் உத்தரவின் பேரில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விசாரணையை ஆரம்பித்தார்.