எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்திய விஜயத்தின் மற்றுமொரு முக்கியமான நாளான நேற்று (04) புது டில்லியில் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான டொக்டர் சசி தரூரைச் சந்தித்துள்ளார்.
ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், இரு நாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்தல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு இருதரப்பினரும் அவதானம் செலுத்தினர்.
இங்கு, இரு தரப்பினரிடையே இரு நாடுகளினதும் அபிவிருத்தி சார் பல விடயங்கள் குறித்தான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
