லசந்த கொலை விசாரணை தீவிரம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

இதற்கு அரச புலனாய்வு சேவையும் ஆதரவு அளித்துள்ளது.