மஸ்கெலியா பகுதியில் இரவு நேரத்தில் ஒளிராத மின்விளக்குகளால் மக்கள் அவதி அடைகிறார்கள்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா நகரில் ஒரு சில பகுதிகளிலும் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களிலும் பொருத்தப் பட்டுள்ள மின் குமிழ்கள் இரவில் ஒளிர்வதில்லை.
கடந்த சில மாதங்களாக இந்த மின் விளக்குகள் ஒளிராததால் இரவு நேரங்களில் பாடசாலை மாணவர்கள், பயணிகள், முதியோர்கள், நோயாளிகள் பாரிய அளவில் இன்னல்களைச் சந்திக்க நேரிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபை முன்வந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
