இந்தியா பாகிஸ்தான் மோதல் நடக்குமா

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் மோதல் நடக்குமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இரண்டாவது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

அவ்வகையில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

முன்னதாக இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது.

ஆனால் அப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்ததால் ஆட்டம் இரத்துச் செய்யப்பட்டது.

ஆகவே அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் மோதல் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.