உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம்

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை வெளியான சாதாரணதரப் பரீடசை பெறுபேறுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
