சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை மட்டக்களப்புவில் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநாின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேலும் வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடா்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி கடற்கரையினை சிரமதானமாக சுத்தம் செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையில் நேற்றுக் காலை இடம் பெற்றது

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்

கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மாநகர சபையின் ஆணையாளர், அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் எனப் பலரும் இந்த வேலைத் திட்டத்தில் கலந்துகொண்டனர்.

கடற்கரையை மேலும் அழகு படுத்தும் நோக்குடன் இந்தச் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொலித்தின், பிளாஸ்டிக் பொருள்கள் இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளும் இங்கு முன்னெடுக்கப் பட்டன.

புதிய அரசாங்கத்தினால் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டதன் பின்பு இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் பிரதான ஆரம்ப நிகழ்வாக இது இடம்பெற்றது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின்போது சுமார் மூன்று கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் இத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது

எமது வட்சப் செனலில் இணையுங்கள்


Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025