டிரம்பின் வரி விதிப்பு கடிதங்கள்

டிரம்பின் வரி விதிப்பு கடிதங்கள் அனுப்பும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து அறிவிக்கும் கடிதங்களை தனது நிர்வாகம் அனுப்பும் என அமெரிக்க ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதங்களை அனுப்பும் பணி இன்று (04) ஆரம்பிக்கபப்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை வியட்நாமுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்த டிரம்ப், இதற்குப் பிறகும் ‘பல புதிய ஒப்பந்தங்களில்’ கையெழுத்திட அவர் எதிர்பார்த்துள்ளார்.
வர்த்தக, வரிக் கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தன்னுடைய நிர்வாகம் தொடங்கியுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மஸ்க் தென்னாபிரிக்காவுக்கு மூட்டைகட்ட வேண்டும்!
