முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதித் தேர்தலின்போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் அவரை இன்று கைதுசெய்தனர்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் ஆஜரானார்..
வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
