போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரரும் சகோதரரும் விபத்தில் பலி

போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரரும் சகோதரரும் விபத்தில் பலி யாகி உள்ளனர்.
போர்த்துக்கல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜோட்டா, அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்குப் பிறகு போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.
கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
லிவர்பூல் கிளப், போர்த்துக்கல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
28 வயதான அவர் 2019, 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்த்துக்கல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
