தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன.

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று காலை கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

காவத்தை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி