பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்படுகிறது. அதன் புதிய விலை 289 ரூபாயாகும்.
இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்படுகிறது.புதிய விலை 185 ரூபாய்.
மேலும் 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கின்றது. புதிய விலை 305 ரூபாய்.
