மும்பாயிலிருந்து இலண்டன் சென்ற எயார் இந்தியா மீண்டும் திரும்பியது

இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில் 242 பேருடன் புறப்பட்ட விமானம், ஒரு நிமிட நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதித் தீப்பற்றிக் கொண்டது.

கோப்புப் படம்

மும்பாயிலிருந்து இலண்டன் சென்ற எயார் இந்தியா விமானம் மூன்று மணித்தியாலம் வானில் பறந்துவிட்டு மீண்டும் திரும்பியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாகப் பயணத்தைத் தொடர முடியாமல் வானில் மூன்று மணித்தியாலம் வட்டமடித்துவிட்டு மீண்டும் மும்பாய் திரும்பியதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

வான் பரப்பில் ஏற்டுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக விமானம் திரும்பி வந்ததாகப் பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025