குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.. அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளில் 05 எலும்பு கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் , இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
செம்மணி பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.