ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம்

ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம்

மலையக வானில் பெருமிதம் பேரணி

ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி பேரணி ஒன்று நடைபெற்றது.

மலையக அறக்கட்டளை என்ற பெயரில் பல அரச சார்பற்ற அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகில் தொடங்கிய பேரணி, அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபம் வரை சென்றடைந்தது.

ஹற்றனில் மலையக வானில் பெருமிதம்

இதன்போது ஓரினச்சேர்க்கையாளர் சமூகமும் பேரணியில் இணைந்து கொண்டதோடு, பல தோட்டத் தொழிலாளர்களும் கலந்துகொண்டு நகர சபை மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தோட்டத் தொழிலாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளை வழங்குவதற்காக நேற்று இரண்டாவது முறையாக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நுவரெலியாவிலும் இதேபோன்ற பேரணி நடத்தப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஹற்றன் க. கிருஷாந்தன்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.