தலவாக்கலை பிரதேச செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை பிரதேச செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: பௌதிக வளங்களை வழங்குமாறு கோரி, இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு ஒன்று (26) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
தலவாக்கலையில் உள்ள தலவாக்கலை லிந்துலை நகர சபைக்குச் சொந்தமான இரண்டு மாடிக் கட்டடத்தில் 2020 ஆம் ஆண்டு பிரதேச செயலகம் நிறுவப்பட்டது.
இந்தச் செயலகத்தின் கீழ், தலவாக்கலை லிந்துல நகர சபைப் பகுதி, திம்புள்ள கிராம சேவகர் பகுதி, கொட்டகலை, அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் குடியிருப்பாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் போராட்டத்தை தொழிற்சங்க கூட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அதன் உறுப்பினர் தம்மிக்க முனுசிங்க, இந்தப் பிரதேச செயலகத்தில் சுமார் 150 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிவதாகவும், பிரதேச செயலகத்தில் உள்ள இடம் அதற்குப் போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.
அதேபோல், பிரதேச செயலகத்தில் பௌதீக வளங்கள் இல்லாததால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறமையான சேவையை வழங்க முடியவில்லை.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
தலவாக்கலை பிரதேச செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பிரதேச செயலகத்திற்கு அருகில் இருந்து தொடங்கி தலவாக்கலை நகரம் வரை சென்றது.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியை மறித்ததன் காரணமாக தலவாக்கலை பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாய்த்தரக்கம் ஏற்பட்டது.
க. கிருஷாந்தன்
