கம்பகாவில் 10மணித்தியால நீர் வெட்டு

கம்பகாவில் 10மணித்தியால நீர் வெட்டு: கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (22) காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளதற்கு அமைய:
பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை, கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
