மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை உருவானதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சிறைச்சாலையின் வௌியில் பாதுகாப்பிற்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளனர்.