கட்டான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கட்டான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: கட்டான பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை அவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.