மக்கள் கூடாரங்கள்மீது ஏவுகணைத் தாக்குதல்

மக்கள் கூடாரங்கள்மீது ஏவுகணைத் தாக்குதல்

மக்கள் கூடாரங்கள்மீது ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேலிய பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.

தெற்கு நகரமான கான் யூனுஸ் பகுதியில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்கள் கூடாரத்துக்குள் உயிருடன் எரிந்து பலியானதாக உடல்களைப் பெற்ற மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காஸாவில் இதுவரை இஸ்ரேலிய தாக்குதலால் 51,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 50 நாள்களாக காஸாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முற்றாக நிறுத்தி வைத்துள்ளது.

இஸ்ரேலியர்கள் மாலைதீவு செல்ல முடியாது

வைர வர்த்தகர் பெல்ஜியத்தில் கைது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025