தேவாலயங்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கை

தேவாலயங்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கை: உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் நடைபெறும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளை (19) வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் (20) சிறப்பு மத சேவைகள் நடைபெறும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அவர் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் முப்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவுக்காகக் காத்திருந்தவர்கள்மீது குண்டர் தாக்குதல்
