மைத்திரிபால சிறிசேன சிஐடியில் வாக்குமூலம்

my33

மைத்திரிபால சிறிசேன சிஐடியில் வாக்குமூலம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் (குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்) இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள், தனிநபர்கள் ஆகியோர் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

பதினொரு இந்திய மீனவர்கள் விடுதலை

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.