அநுராதபுரம் காமுகனுக்குத் தடுப்பு காவல்

Anuradhapura-Rap

அநுராதபுரம் காமுகனுக்குத் தடுப்பு காவல்: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இரண்டு நாள் தடுத்துவைத்து விசாரணை செய்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த அனுமதியை வழங்கினார்.

சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரின் சகோதரி கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் அவரது கணவர் மொபைல் போனை திருடியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இருவரையும் இந்த மாதம் 17 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 10 ஆம் திகதி, அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் தனது கடமைகளிலிருந்து உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று (12) கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025